ஏற்காடு பேருந்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு
ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒரு சிறுவன் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 45க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளார்.